"இனி டாஸ்மாக்கில் மது வாங்கினால் பில் கிடைக்கும்"- தமிழக அரசு அறிவிப்பு!
#India
#Tamil Nadu
#TamilCinema
#Tamil People
#liquor
#shop
Mani
2 years ago
தமிழகத்தில் மொத்தம் 5000 டாஸ்மாக் கடைகள் உள்ளன, இந்த நிறுவனங்கள் விரைவில் கணினிமயமாக்கப்படும். இதை நிறைவேற்றும் வகையில், டாஸ்மாக் கடைகளை கணினிமயமாக்கும் பணிக்காக, பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு, 294 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை வழங்கியுள்ளது.
இதன் விளைவாக, மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் இருப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு மது விற்பனையைத் தடுக்கும் வகையில் கண்காணிக்கப்படும். விரைவில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட உள்ளதால், இனி மது வாங்கினால், பில் கிடைக்கும் என்ற நடவடிக்கையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.